உங்களின் நாட்களின்
குறுக்கே என்னை கண்டால்,
அழைத்து விடாதீர்கள்...!
ஒரு வேளை நாம் எதிர்பட்டுக்
கொண்டால், ஒரு புன்னகையில்
மென்மையாக கடந்துவிடுங்கள்..
அழுத்தமாக சொல்கிறேன்,
தெரிந்தோ, தெரியாமலோ
"எப்படி இருக்க?" என்று மட்டும்
கேட்டு விடாதீர்கள்..
அணை உடைய ஒரு அதிர்வு
போதுமல்லவா ?
10.09.2025 00:54 — 👍 0 🔁 0 💬 0 📌 0
காதலித்தல் இயல்பு..
காதலிக்கப்படுதல் வரம்..
காதலிக்கப்படுபவர்கள்
பாக்கியசாலிகள்..
06.09.2025 08:57 — 👍 0 🔁 0 💬 0 📌 0
Siraj - warhorse...!🫡🔥
04.08.2025 10:57 — 👍 0 🔁 0 💬 0 📌 0
என் பிரார்த்தனைக் கூடத்தில்
எந்தக் கடவுளும் இருந்ததில்லை..
உனக்கான பிரார்த்தனைகள்
மட்டும் இருந்து கொண்டிருந்தன..
29.07.2025 16:26 — 👍 0 🔁 0 💬 0 📌 0
என்ன நினைத்தானோ
கண்ணை திறந்தவன்
மீண்டும் மூடிக் கொண்டான்..
நிச்சயமாக தெரியும்
இந்தமுறை
"கீர்த்தி எனக்கு மட்டும்
ஃப்ரெண்ட் ஆ இருக்கணும்"
என்றுதான் வேண்டியிருப்பான்..
29.07.2025 13:44 — 👍 0 🔁 0 💬 0 📌 0
எரியும் மெழுகுவர்த்தியை
கைகளில் ஏந்திக்கொண்டு
சுட்டுவிடாமல் பார்த்து பார்த்து
நடக்கிறான் ஒரு குழந்தை..
அம்மாவின் உதவியோடு
நேராய் நிறுத்தியபின்
கண்களை இறுக்கி
மூடிக் கொள்கிறான்...
எத்தனை எத்தனை
வேண்டுதல்கள் குழந்தைகளுக்கு..
நாளைக்கு ஸ்கூல்
லீவ் விடனும்..
அம்மா அடிக்க
கூடாது என்னைய...
சாக்லேட், பொம்மை,
சைக்கிள் என நீள்கிறது
கடவுள் பரிசளிக்க
வேண்டிய பட்டியல்..
29.07.2025 13:44 — 👍 0 🔁 0 💬 1 📌 0
முட்டாளுங்க தங்களோட தேசப்பபற்று காமிக்கிறதுக்கு எடுக்குற ஆயுதம்தான் இந்த திடீர் போர் ஆதரவாளர்கள் எழுப்புற கரகோஷம். வரலாறும் தெரியாது அடிப்படை அறிவும் கிடையாது. வெறும் ஆட்டுமந்தை கூட்டம்
21.07.2025 22:27 — 👍 0 🔁 1 💬 0 📌 0
Of course she has to be Tamil, otherwise who can I sing these lines to?
பூவாளி பன்னீரும்
புதுச்சேலை அஞ்சாறும்
கனவோட கண்டேனே
நமக்காக தான்...
நெஞ்சோட சந்தம் புடிச்சாளே
நான் ஆடப் போறேன்..
உன்னால என்னை மறந்தேனே
ஆகாச வீரன்...
17.07.2025 16:12 — 👍 1 🔁 0 💬 0 📌 0
எதையாவது எழுதிக் கொண்டிருந்த
கைகள், உன்னை மட்டும்
எழுத பழகிவிட்டது..
கொஞ்சம் எங்கேயாவது
பிசிறு தட்டினாலும் சரி
காகிதத்தோடு கவிதையையும்
கிழித்து எறிந்து விடுகிறேன்..
பூரணத்தின் பொருள்
அல்லவா நீ ....
15.07.2025 16:38 — 👍 0 🔁 0 💬 0 📌 0
someone buy me a book to restart my reading phase.
10.07.2025 10:51 — 👍 0 🔁 0 💬 0 📌 0
Switching between apps, texting with the same person..Ahh shit, I sense my future..
10.07.2025 08:21 — 👍 0 🔁 0 💬 0 📌 0
எத்தனை புயல்களைக்
கடந்திருக்கும்
இவ்விருட்சம்...
இன்று உன்
பூந்தென்றலுக்கு
வேர் அசைகிறது...
07.06.2025 12:33 — 👍 0 🔁 0 💬 0 📌 0
The immediate moment I hear the words hardwork, persistence, love, hope, chance, king, legend,
I get remind of VIRAT's face.. I'm super proud and happy for witnessed his PRIME.
03.06.2025 19:54 — 👍 0 🔁 0 💬 0 📌 0
இடது தோளில் வந்து
அமருகிறது ஓர் பட்டாம்பூச்சி..
ரெக்கைகள் மட்டும்
அசைந்து கொண்டே இருக்கிறது..
பயம் போலும்..
பட்டென்று விரலுடிக்கில்
சிக்கி நசுங்கி விடுமென...
எனக்கும் பயம் தான்..
சட்டென்று பறந்துவிடுமோ என
இருந்துவிட்டு போகட்டும்
அதற்கு விருப்பமான
காலம் வரை..
பாரம் பல தாங்கிய தோள்கள்..
பட்டாம்பூச்சி தாங்காதா என்ன.?
30.05.2025 08:01 — 👍 1 🔁 0 💬 0 📌 0
In english ~
I'm afraid of losing you..
In தமிழ் ~
கனவுதான் இதுவும், கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம்..
20.05.2025 18:24 — 👍 0 🔁 0 💬 0 📌 0
பெறுதலில் என்ன
இருக்கிறது ??
கொடுத்தல் தானே
அன்பின் அர்த்தம்..
14.05.2025 12:11 — 👍 0 🔁 0 💬 0 📌 0
ஏதாவது அழிப்பான்
இருக்கிறதா ?
ஒரு யுகம் உன்னுடன்
வாழ கண்ட கனவுகளை
அழிக்கும் அளவிற்கு
கொஞ்சம் பெரிய
அழிப்பான்...?
10.05.2025 06:21 — 👍 1 🔁 1 💬 0 📌 0
இரண்டு, அணு ஆயுதம் கொண்ட நாடுகள் போரிடும் போது எப்படி நெஞ்சு பதறாமல் உங்களால் கைதட்ட முடிகிறது? எப்படி உங்களால் தீபாவளி என்று வாய் கூசாமல் கொண்டாட முடிகிறது? ஹிரோஷிமா, நாகசாகி கதையை படித்து வளர்ந்த உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லையா ? காஷ்மீரில் மரணிக்கும் மக்கள் மக்களாக உங்களுக்கு தெரிவதே இல்லையே ஏன் ? எதற்கும் கைகளை தட்டும் முன், கொண்டாடும் முன், போரை ரசிக்கும் முன், அண்ணாந்து பார்த்து கொள்ளுங்கள். அடுத்த குண்டு உங்கள் தலை மீதும் விழலாம்..
08.05.2025 07:39 — 👍 1 🔁 0 💬 1 📌 0
போர் என்ற வார்த்தையை உச்சரிக்க பழகும் முன்னே இறக்கும் குழந்தைகள், எந்த பாவத்திற்கு தகுதியானவர்கள்?
அவர்கள் எம்மதம், எந்த நாடாயினும் வாழத் தகுந்தவர்கள் அல்லவா? குற்றவாளிகள் தண்டனைக்குரியவர்கள்.. போர் என்ற வார்த்தைக்கு பின்னாலேயே ஒன்றும் அறியாத மக்களின் பிணக்குவியல்கள் மலை போல குவிகிறது. அரசின் போரை, போர் நடவடிக்கைகளை ஆதரிக்கும் முன் மக்களாய், குறைந்த பட்ச மனிதாபிமானத்தை கையில் எடுத்துக்கொள்ளுங்கள்.
08.05.2025 07:28 — 👍 1 🔁 0 💬 1 📌 0
போர்.. எந்தப் போரும் பூக்களை மலரச் செய்ய போவதில்லை. எந்தப் போரும் புன்னகைகளை நிலைக்க செய்ய போவதில்லை. போர் ஒரு அறமற்ற செயல். மனிதாபிமானம் அற்ற செயல். காசாவிற்கு கண்ணீர் சிந்தியவர்கள் இன்று இந்தியாவின் குண்டு மழைகளுக்கு கை தட்டுவது, சமூக ஊடகங்களுக்காக அவர்கள் போற்றிகொண்ட மனிதநேய ஆடைகளை அவிழ்த்து அம்மணமாக ஆக்குகிறது. போருக்கு பின் நாடு இயல்புக்கு திரும்பிவிடும். பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் எப்போது திரும்புவது ?
08.05.2025 07:21 — 👍 1 🔁 0 💬 1 📌 0
சாரல் சிதறும்
மேகம் ஒன்றின் அடியில்,
உன் தேநீர் கோப்பையும்,
என் காப்பி கோப்பையும்
முட்டிக்கொள்ளும்,
முற்றத்து உரையாடல்
ஒன்றிற்குத்தான்
இவ்வுயிர் தப்பிப்பிழைத்து
நிற்கின்றது...
06.05.2025 09:32 — 👍 0 🔁 0 💬 0 📌 0
உங்கள் இருப்பு ஒருவருக்கு
அத்தியாவசியம் ஆகும் வரை,
யாருடைய கண்ணீருக்காவது
நீங்கள் கரங்கள் ஆகும் வரை,
ஒரு அன்பில் நீங்கள்
மூழ்கி தத்தளிக்கும் வரை,
பிறப்பிற்கான பொருளாக
ஒரு அன்பை, காதலை உணரும் வரை,
பறந்து கொண்டே இருங்கள்..
வானம் அத்தனை பெரியது..
06.05.2025 09:22 — 👍 0 🔁 0 💬 0 📌 0
kadaisi few post parunga ennodathu theriyum
06.05.2025 01:38 — 👍 0 🔁 0 💬 0 📌 0
naaane inga post panni atha ss eduthu vera app la post panrathukaga than varen
06.05.2025 01:32 — 👍 0 🔁 0 💬 0 📌 0
கனமாக தான் இருக்கிறது
இவ்வாழ்வும், இவ்வுழகும்..
நகர்த்தி கொண்டு செல்வது
நீயும், நின் நினைவும் மட்டும்தான்..
06.05.2025 00:02 — 👍 0 🔁 0 💬 0 📌 0
sollunga bro
06.05.2025 00:01 — 👍 0 🔁 0 💬 0 📌 0
நீ தொடும் விதம் தரும் விசை
என் அகம் புறம் இயல் இசை
நீ ஒரே ஒரு இமை அசை
நான் உனக்கென உறுதிசெய்..
முகைமழை முகைமழை..
(mugaimazhai - Tourist family)
05.05.2025 08:04 — 👍 0 🔁 0 💬 0 📌 0
பெருங்காற்றில்,
சருகுகள் நொறுங்கும்
சத்தத்திற்கு பதறுகின்றன
பழுத்த இலைகள்...
26.04.2025 16:58 — 👍 0 🔁 0 💬 0 📌 0
மழைக்கு ஒதுங்கிய
கூரை சாய்ப்பின்
பிளவுகள் வழியே
சொட்டுகிறது மழை நீர்..
உச்சி வருடி,
முதுகுத்தண்டில் இறங்கும்
மழை நீரில்
அப்படியே அவள்
புன்னகையின் இதம்..
24.04.2025 12:15 — 👍 0 🔁 0 💬 0 📌 0
ஒரு வேளை
நான் எழுதி, அழித்த
குறுஞ்செய்திகளை
நீ வாசித்திருந்தால்,
என்றோ என்னை வெறுத்திருப்பாய்..
யாரோவாக கூட
நாம் மாறியிருப்போம்..
ஆனால், நீ ஒன்றை
உணர்ந்திருப்பாய்..
யாதுமற்று நீ நிற்க
நேர்ந்தாலும்,
என் நேசக்கரம் உனக்காக
நீட்டப்பட்டே இருக்கும் என்று..
யாரோவென்று நாம்
ஆனாலும்,
உன்னை அதிகமாக
நேசித்தவன் நான்
மட்டும் என்று...
23.04.2025 10:03 — 👍 0 🔁 0 💬 0 📌 0